அரப்பு

பனி பொழியும் குளிர்ந்த மாலையில் 
சாலையோரம் அமர்ந்திருக்கும் பெண்ணொருத்தி 
என் அம்மாவின் அரப்பு கலர்  புடவையை அணிந்திருக்கிறாள். 
நீண்ட கயிற்றில் இழைகள் பிரித்து பிரித்து 
முடுச்சிட்டு கொண்டிருந்தாள் 
எதற்கும் பிறழாத அவளது உலகம் 
முடுச்சுகளால் நிரம்பியிருக்குமென நினைக்கிறேன் .
பட்டு, ஜரி, காட்டன், வாயில் என தரம் பிரித்து 
பகிர்ந்து கொள்ளப்பட்டவைகளில் 
கைகள் மாறி மாறி 
இவளை அடைந்திருக்கும்  
கழித்து கட்டப்பட்ட இந்த அரப்பு கலர் - 
இழப்பை துளிர்க்கச்செய்கிறது 


கருத்துகள் இல்லை: