எல்லா மணங்களிலும் அதன் வேர்கள் 
நீக்கமற நிறைந்து வளர்ந்திருக்கிறது 
இத்தனை காலம் திளைத்த விஷத்தை 
வேரோடு முறிக்க ஒரு பேரன்பு தேவைப்படுகிறது.
சூரியனின் வெளிச்சத்தை போல்  சகல உலகுக்கும் 
பொதுவான ஒரு பேரொளி தேவைப்படுகிறது .
ஒரு சூஃபியின் ஆனந்தத்தை எல்லோருக்கும் பரப்பும் 
ஒரு பேரானந்தம் தேவைப்படுகிறது.
அன்பின் ஒரே அலைவரிசையில் எல்லோரையும் கோர்த்து 
நம் நாளங்களை மீட்ட ஒரு பெரும் இசை தேவைப்படுகிறது.
நாமெல்லாம்  சேர்ந்து நம்மை மீட்டெடுக்க 
ஒரு பெரும் அன்பியாக்கம் தேவைப்படுகிறது..

கருத்துகள் இல்லை: