என்று உணரும் நொடியில்
நா வறண்டது
நெஞ்சு கனத்தது
அறை சுழன்றது
மூச்சு விட முடியவில்லை
என்னுள் மீச்சிறு அங்கமொன்று செயலிழந்தது
அது ரத்தம் சூழ் உறுப்பாக மட்டும் இருக்காது
வலி இல்லாத வேளையில்
கண்களில் வரும் இத்தனை நீர்
உடைவது வேறெதுவோ என்பதன் அறிகுறி