கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
யாருமில்ல்லாத அந்த ரயில் நடைமேடையின் 
கடைசி பெஞ்சின் மங்கிய வெளிச்சத்தில்  
ஒரு ஆணும் பெண்ணும்
கொஞ்சமாய் சிரித்தபடி அமர்ந்திருந்தனர்.
அவர்களின் பேரொளியை  
வேகமாய் கடந்த ரயிலில் இருந்த 
தரித்திரத்தை வெறித்திருந்தவன் 
தரிசித்து தூங்கச்சென்றான்.
என் விஸ்கிக்கான 
மீன் துண்டுகளில் 
முள்ளில்லாத பாகங்களை 
யார் எடுத்து வைப்பது 
நீ இல்லாமல் 
ஜன்னலோர ரயில் பயனத்தில்
தூரத்தில் வலையும் பாதை.  
வேறு ஒரு ரயிலை பார்பதுபோல் 
என் ரயிலயே நான் பார்க்கிறேன்
நைந்த  தலையணையை 
கிழித்து உதறினாலும் 
பழைய பஞ்சுகள்  
பறப்பதில்லை

கொசு

 என்னை நோக்கி வரும் கொசுவை 

லாவகமாக mosquito bat கொண்டு அரைக்கிறேன் 

மின்சாரம் தாக்கி அதன் சிறு உடல் 

பெரும் அதிர்வுடன் வெடிக்கிறது 

கால்களும் ரேகைகளும் தூசியென உதிர்கின்றன 

அது குடித்த  ரத்தம் சுண்டி, பொசுங்கி, புகையாகிறது 

அதன் குறித்த சுவையை நுகர்ந்து 

நான் உச்சமடைகிறேன் 


பிரபஞ்சத்திலிருந்து ஒரு குழல் வழியே
எனக்குள் வரும் வரிகள்...
எனக்குள் எல்லாம்
என்னிலிருந்து எல்லாம்..