tamil kavithai லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
tamil kavithai லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
யாருமில்ல்லாத அந்த ரயில் நடைமேடையின் 
கடைசி பெஞ்சின் மங்கிய வெளிச்சத்தில்  
ஒரு ஆணும் பெண்ணும்
கொஞ்சமாய் சிரித்தபடி அமர்ந்திருந்தனர்.
அவர்களின் பேரொளியை  
வேகமாய் கடந்த ரயிலில் இருந்த 
தரித்திரத்தை வெறித்திருந்தவன் 
தரிசித்து தூங்கச்சென்றான்.
ஜன்னலோர ரயில் பயனத்தில்
தூரத்தில் வலையும் பாதை.  
வேறு ஒரு ரயிலை பார்பதுபோல் 
என் ரயிலயே நான் பார்க்கிறேன்
நைந்த  தலையணையை 
கிழித்து உதறினாலும் 
பழைய பஞ்சுகள்  
பறப்பதில்லை

கொசு

 என்னை நோக்கி வரும் கொசுவை 

லாவகமாக mosquito bat கொண்டு அரைக்கிறேன் 

மின்சாரம் தாக்கி அதன் சிறு உடல் 

பெரும் அதிர்வுடன் வெடிக்கிறது 

கால்களும் ரேகைகளும் தூசியென உதிர்கின்றன 

அது குடித்த  ரத்தம் சுண்டி, பொசுங்கி, புகையாகிறது 

அதன் குறித்த சுவையை நுகர்ந்து 

நான் உச்சமடைகிறேன் 

பயணச்சீட்டுகளும், சில்லறைகளும்..

எனக்கும் உனக்கும் உள்ள நேரம்
மூன்றே நிறுத்தங்கள்..
இடைவெளியாய் சில கம்பிகள்..
கைமாறிய சில்லறைகளில் என்  ஸ்பரிசங்கள்..
திரும்பிய பயனசீட்டுகளில் உன் வெட்கங்கள்..

நான் ஏறும்பொழுதில் உன் ஓரக்கண் பார்வை..
பூக்கடை நிறுத்தத்தில் மலர்ந்து விடைகொடுப்பாய்..
அந்த ஒரு நாளில் ஒரு நிறுத்தம் முன்னதாக ஏறி
காதலை சொன்னேன்..
ஒரு நிறுத்தம் தள்ளி இறங்கி
சம்மதம் சொன்னாய்..

நீ ஓயாமல் பேசிய பெண்மணி
என் மதனி என்று ஜாடை காட்ட - உன் நாணத்தில் உடைந்தது
நம் குட்டு..
இன்று ஒரே நிறுத்தத்தில் ஏறும் நாம்
புதிதாய் விடப்பட்டிருக்கும் PP வண்டியில் செல்லாது
நம்  பேருந்திலேயே தொடர்கிறோம்..
அப்படியே இருக்கின்றன
பயணச்சீட்டுகளும், சில்லறைகளும்..