இன்னும்....

எல்லா மொழிகளும் வர்ணித்து
வார்த்தைகள் தீர்ந்த பின்பும்
இன்னும் மிச்சமிருக்கிறது காதல்...

தலைமுறைகள் அழுது தீர்த்தும்
இன்னும் ஆழ்மனதில் புதைந்திருக்கிறது
இன வெறியின் சோகம்..



உணர்ச்சிகளால் பந்தாடப்படும் மனம்
மரணத்தின் விளிம்பில் கேட்கிறது
இன்னும் ஒரு வினாடி வாழ்க்கை..

தனிமை

செய்வதற்கு எதுவுமில்லாமல் போய்க்கொண்டிருக்கறது முன்னிரவு..
புதைமணலாய் சூழ்ந்திருக்கிறது நிசப்தம்..
நொடிகளாய் உருமாறுகிறது தனிமையின் மூர்க்கம்..
உறவாட ஜன்னலை திறக்கிறேன்...
கைவிடவில்லை இயற்க்கை...