ஏதோ ஒரு சொல்லுக்காக துடித்துக்கொண்டிருக்கிறது இன்னொரு சொல்..

ஏக்கத்தின் முழு வடிவம் உன் வயதாக இருக்கலாம்..

கன நேரத்து பார்வையில்தான் எத்தனை கணம்..

ஒரு பொய் கோபத்திலும் ஒரு பொய் மன்னிப்பிலும்
நிஜமான் சந்தோஷம்...
படிப்பார் அற்ற எழுத்து
உழன்றுகொண்டே இருக்கிறது
எல்லோர் மனதிலும்..

யாருக்கென்று தெரியாமல் வரும் கவிதை
இருந்துவிட்டு போகட்டும் 
அற்பத்தின் விதிவிலக்காய்..