ஒரு துக்க நாளில் பெய்த அடைமழையை  நினைத்து
நான் அழுதுகொண்டிருக்கிறேன்..
இறப்பில் ஏதேனும் அந்தரங்கம் உண்டாயின்
அதை அறிவித்தபடி அது பெய்தது..
அதையறிந்த ஒரே உயிர் நானாகிப்போனேன்...
மன்னிப்பையோ கண்ணீரையோ புரிந்துகொள்ள யாருமில்லை.
அந்த கடைசி ஊர்வளத்தில் நனைந்துகொண்டே
நான்  மழையிடம் அதை முணுமுணுத்தேன்..
அடைமழை தனிந்து ஊசி மழை  என்னை குத்தித்தீர்த்து..
பின் வந்த பேரிடியில் பயந்து விழுந்தேன்..
கரைந்துகொண்டிருந்தன பாவங்கள்..