கொசு

 என்னை நோக்கி வரும் கொசுவை 

லாவகமாக mosquito bat கொண்டு அரைக்கிறேன் 

மின்சாரம் தாக்கி அதன் சிறு உடல் 

பெரும் அதிர்வுடன் வெடிக்கிறது 

கால்களும் ரேகைகளும் தூசியென உதிர்கின்றன 

அது குடித்த  ரத்தம் சுண்டி, பொசுங்கி, புகையாகிறது 

அதன் குறித்த சுவையை நுகர்ந்து 

நான் உச்சமடைகிறேன் 

சர்வ வல்லமை படைத்த பார்த்தசாரதியின் 
கோயில் கோபுரத்தில் அமரும் புறாக்கள் 
எந்த ஒரு பயமுமின்றி  எச்சமிடுகின்றான் 
 நீ இல்லாமல் வாழ்வதற்கு 
நான் பழகி வருகிறேன்.
திடீரென ஒரு மழை இரவில் 
திடுக்கிட்டு எழுகிறேன்..
பயத்தில் நெஞ்சு கனக்கிறது 
இடி என் தலையில்தான் விழுகிறது..
என் விரல்கள் இன்னும் நடுங்கிக்கொண்டுதான் இருக்கின்றன.
பெரும் சத்தத்துடன் என் சுவாசம் ஒரு எந்திரத்தை போல அரற்றுகிறது 
வடிந்தோடும் கண்ணீர் என் சோகம் உணர்த்துகிறது..
நான் பெரும் ஓலமிட்டு யாருமில்லாத மழை இரவில் அழுகிறேன் 
அன்பே.. நான் இல்லாமல் நீயும் 
வாழ பழகி விடுவாயா?
how do we settle the differences?
we both want to go in two different directions
easy thing we choose to split and each to go as we please
but then there is no us in that
we are almost singles without our significant other..
we return back to our home as always

we put our bodies to sleep in the same bed
but in different corners
we use the same bathroom
but ensure to spray air freshner to erase our smell 
we use the same kitchen
but cook our own food
we have same tv
but use different netflix accounts
And we take care of the baby at different times

suddenly, this is what we are..
two people time slicing a bed, bath and a baby
two people under same roof alive without life
two people creating their own worlds
two people having their own parties to attend
two stars in their own worlds
two blackholes swallowing each other
two people building a void
two people thinking whats the point
two people stubburnly independent
two people foolishly intelligent
two people competing to win a nothing

ஒரு முழு மெனக்கெடலை கொட்டிய அன்பு

திடீரென்று நீ என் முன் வந்து நின்று 
புருவத்தை உயர்த்தி "எப்படி என் surprise ?" என்று கேட்கிறாய்..
நான் கண்கலங்கி அழுது ஊரையே கூட்டிவிடுகிறேன்..
நீ கோவமும் குழப்புமாய் இருக்கிறாய்..
நான் ஏன் இவ்வளவு மூர்ச்சை அடைகிறேன் என்று கேட்க்கிறாய்..
ஒரு ஆச்சரிய தருணத்தை நான் சந்தித்து எத்தனையோ நாட்களாகிவிட்டது 
ஒரு முழு மெனக்கெடலை கொட்டிய அன்பை நான் கண்டு எத்தனையோ நாட்களாகிவிட்டது ..
என்னை மட்டுமே பார்த்து சிரிக்கும் கண்களை சந்தித்து எத்தனையோ நாட்களாகிவிட்டது ..
வெறுமையின் கிடங்கில் ஒரு சிறு குருவி பறந்து வருகிறது..
அதன் ரெக்கைகளின் சத்தம் அந்த அண்டமெங்கும் எதிரொலிக்கிறது..

கற்கையர்கள்

தண்ணீரில் விளையாட போன குழந்தையை
அடிக்க தூக்கிய அப்பாவின்  கை
கல்லாக மாறியது
ஆசிரியரின் கை கல்லாக மாறியது
தெருவில் சண்டையிட்டவர்களின் கை
கல்லாக மாறியது
ரௌடிகளெல்லாம் வேலையற்று போனார்கள்
திரைப்படங்களில்  சண்டைகாட்சிகள் இல்லாமல் போயின
போலீஸ்காரர்கள் முடங்கி போனார்கள்
சர்வாதிகார அரசுகள் கவிழ்ந்தன

பலர்  கல்லாக மாறிய கைகளுடன்
வெளியே வருவதில் அவமானபட்டனர்
வன்முறையாளர்களை மக்கள் ஒதுக்கினார்கள்
மனிதர்கள் இரண்டு வகையாக பிறந்தனர்
மனித கையர்க்கள் இன்னும் சந்தோஷமாக இருந்தனர்
கற்கையர்கள் இன்னும் கோபமேரி கல்லாகவே மாறினார்
சிலர் கொஞ்சமாக திருந்தி தங்கள் மனித கைகளை
திரும்ப பெற்றனர்

அப்பா குழந்தையிடம் கேட்டார்
"நீ வெளில போய்  தண்ணில விளையாடுறயா?"
குழந்தை யோசித்தது
"இங்க தண்ணி சிந்தினா அப்பா எல்லாத்தையும் தொடைக்கணும்"
குழந்தை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டது.

இந்த சமூகம் கேட்பதற்கு தயாரானது.

E for Elephant, H for Human

You gave me a pineapple
But, I was looking for a forest

You gave me gunpowder
But, I chose to die with peace

You said you have a sixth sense
But, I don't think it makes any sense

You said I am a magnificent animal
But am only a tiny part in our land

You say it was meant for a wild boar
But, am glad I saved a poor boar

You cried for me when this went viral
But, tell me something, what happened to our sparrows?

You know so much from an atom to universe, and beyond
But, can you please add love in your list

You teach your kids, E for elephant
But, I learnt that I shouldn't stop at H for Human

You gave me a pineapple
But, I was looking for a forest





லாபகரமான வாழ்க்கை

காலம், எனக்கான வட்டத்தை
தனது தர்க்தின்  பற்களால்
விழுங்கி விழுங்கி சிதைக்கிறது..
"இதனால் உனக்கு ஏதேனும் லாபம் உண்டா?"
என்று எப்போதும் கேட்க்கிறது.
என் திருமணம்  லாபகரமானது..
என் உறவு லாபகரமானது..
என் நட்பு லாபகரமானது..
என் உதவி லாபகரமானது..
என் தானம் லாபகரமானது..
என் வேலை லாபகரமானது..
என் ஓட்டு லாபகரமானது..
என் குழந்தையின் படிப்பு லாபகரமானது..
நான் லாபத்தினால் மூளைசலவை செய்யப்பட்டுள்ளேன்..
வேறொன்றும் செய்ய முடியாத ஒரு இரவில் 
ஒரு பாடல் கேட்கலாம் என தோன்றியது.
எனக்கு எந்த பாடலை கேட்பதென்று தெரியவில்லை 
ஏனெனில் இசை லாபகரமானது அல்லவே..

தயவுசெய்து கதவை மூடவும்

நான் எங்கள் மின்தூக்கியிடம் பேசினேன்..
நலம் விசாரித்து கொண்டோம்..
குப்பை பைகளை கொண்டுவருவதால் தனக்கு மூச்சடைப்பதாக அது கூறியது ..
பாதியில் மின்தூக்கி நின்றதால் பயந்துபோன ஒரு பாட்டியை நினைத்து வருந்தியது..
சுத்தம் செய்யும்பொது அதன் பொத்தான்களை சரியாக சுத்தம் செய்யவதில்லை என்று வருந்தியது..

தினமும் மூன்றுமுறையேனும்
எங்கள் மின்தூக்கியில்
மேலும் கீழுமாக சென்று வருகிறேன்..
காரணமே இல்லாமல் அதன் கதவுகளை
திறந்தே வைக்கிறேன்..
"தயவுசெய்து கதவை மூடவும் .."
மூன்று நொடி நிசப்தம்..
"தயவுசெய்து கதவை மூடவும் .."
மூன்று நொடி நிசப்தம்..
"தயவுசெய்து கதவை மூடவும் .."

கதவை மூடினால் என்ன தருவாய் என்று கேட்டேன்..
என்கள் அந்தரங்கம் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தது..
நான் எங்கள் மின்தூக்கியிடம் பேசினேன்..


- லாக்டௌன் பக்கங்களில் இருந்து..

ஒரு கருப்பு அழகி 
நீல சோகத்துடன் இருந்தாள்..
பச்சை பொய்யொன்றை  சொன்னேன்..
சிவந்துவிட்டாள்.

கலையை ரசிக்கும் மனம்

கதைகளின் காட்டுத்தீயில்
கருகும் மனம்
கவிதைகளின் பேரலைகளில்
தத்தளிக்கும் மனம்
பேரானந்தத்தில் திளைத்து
மென்மையாய் சிரிக்கும் மனம்
இவைதானே கலையை ரசிக்கும்
சிறு பொழுதின் மனம்?
எத்தனை பொய்களை கடக்க வேண்டும்
சிறு உண்மைகளை தரிசிக்க..

ஒரு பேரிடரை எதிர்பார்த்து..

நான் ஒரு பேரிடரை எதிர்பார்த்து தினமும் காத்திருக்கிறேன்
தினமும் அதற்காகத்தான் செய்திகளை வாசிக்கிறேன்
அருகில் ஒரு புயலோ, எரிமலையோ, சுனாமியோ
இல்லாமல் இருப்பது அயர்ச்சையாக இருக்கிறது

பள்ளிக்கு விடுப்பு கிடைப்பதாக 
ஒரு அல்ப மனநிலைதான் ஆனாலும்
ஒரு வாரம் அலுவல் இல்லது,
மிகவும் கொஞ்சமே சமைத்து
மின்சாரமோ அலைபேசியோ இல்லாமல்
சக மக்களை பற்றி யோசித்து
கொஞ்சமாக உதவி செய்து 
சோம்பலான சில நாட்கள் தேவைப்படுகிறது


ஒரு பேரிடர்
நம் ஓட்டத்தை தடுத்து
"கொஞ்சம் நில்லு..தண்ணி குடி" என்கிறது..

ஒரு பேரிடர்
அடிப்படை உணர்வுகளை
கிளர்ச்சியடைய செய்கிறது

ஒரு பேரிடர்
நம் சொந்தங்களுக்காக
ஏங்க வைக்கிறது

ஒரு பேரிடர்
நம்மையே ஆட்க்கொண்டாலும்
பெரிதாக ஒன்றும் கஷ்டமில்லை