வேட்டையின்போது தவறிய அம்பொன்று
இன்னும் குத்தி நின்றுகொண்டிருக்கிறது...
கொடிபடர்ந்த அம்பின்மேல் அமர்ந்தது  குருவி
எச்சமிட்டு அம்பின் பாவம் கழுவியது..
நீ என்றாவது ஒரு நாள் கடலை நேசிப்பாய்.
அன்று என் மௌனம் புரியும்..
அதுவரை நானொரு சலசலக்கும் அலை மட்டுமே..
ஆதாம்-ஏவாளுக்கு இடையே 
ஏதோ ஒன்று இருந்திருக்கும்.
அது காதலாகவும் இருக்கலாம்..