இத்தனை நாள்
எப்படி தவற விட்டேன்..
கண்முன்னே சிதறிக்கிடக்கிற கவிதைகளை..

பொறுக்க தோன்றவில்லை.
அழகான குவியலது.
சில செருப்படிகளும் அடக்கம்.

திரும்பி விழுந்த ஒற்றை சருகு 
விரிக்கிறது 
எறும்புக்கான வானத்தை..

குவியலில் எனக்கு தெரிந்ததில் ஒன்று.
உங்களுக்கு தெரியாவிடி வெளி நோக்குங்கள்.
அது வெற்று வெளியல்ல..
அழகின் புதிய வரையறை நீயாகியதால்
எழுதப்படாத சிறந்த தேவதை கவிதை
என்னுள் மட்டுமே இருக்கிறது..


வெட்டிய பார்வைக்கே - ஒரு நொடி 
விட்டுத்துடித்தது இதயம்..
கூறிய கதைகளிலே - மனதில் 
ஊறிய  உன் அபிநயம்..
சட்டென விலகியதால் - உதடுகளில் 
வெட்டப்பட்ட முதல் முத்தம்..
மழை மாலை அணைப்புகளில் - தேநீருடன
அலைபாய்ந்த தருணம்..
ருதுவாகிய பொழுதில் - நீ சிவந்த
ரகசிய கற்பனைகள்...
நீயில்லாத வெறுக்கப்பட்ட கனவுகள்..
விடைபெற அணைத்தபோது - விலகாமல் நின்ற 
மௌன நிமிடங்கள்..
எத்தனை ஞாபகங்களோ - அத்தனையும் 
பித்தனின் பாசுரங்களோ...