கனவின் கூட்டில் ஒரு மாயை 
பாவங்களின் முதலும் முடிவும் அது..

சொல்லின் இறுதியில் உதிரும் மௌனம் 
என்றாவது இன்னொரு சொல் அதனை நிரப்பும்..

உறவின் ரகசிய ஆட்கொள்ளல் 
அதை கொள்ளாமல் இருப்பது இயலாமை..

உந்தன் நிழலோ 
அதன் வடிவோ 
என் செருக்கை கொன்றிடும் 
தழலோ...

வியர்க்கும் நெற்றியோ 
துடைக்கும் அழகோ
கலையும்  பொட்டோ
தொலையும் நானோ..

உன் முரணோ 
என் அதிர்வோ 
சற்றும் எதிர்பாராத புதுப்புது
நீயோ..

உன் பிரிவோ
மகிழ் கனவோ 
வெட்கித்து எழும் 
இரவோ..