தாமரை மலரும்
சூரியன் உதிக்கும்
இலை துலிர்க்கும்
குக்கர் விசிலடிக்கும்
கை ஏதோ செய்யும்.
அதெல்லாம் சரி..
படகு எப்போ திரும்பும்?
காவிரி எப்போ திறக்கும்?
விவசாயம் எப்போ செழிக்கும்?
கூவம் எப்போ மனக்கும்?
கீழடி எப்போ திறக்கும்?
டெங்கு எப்போ ஒழியும்?
டாஸ்மாக் எப்போ மூடும்?
தோழனுக்கு எப்போ கோயில் திறக்கும்?
ஜாதி எப்போ ஒழியும்?
நம் தலை எப்போ நிமிரும்?
சோறு எப்போ கிடைக்கும்?

நல்ல வேளை!!

நல்ல வேளை!
நாம்  பார்த்துக்கொண்டு இருக்கும்போதே
 பூக்கள் வாடி வதங்கி கருகி விடுவதில்லை
காலையில்  மலர்ந்திருக்கும் ரோஜா 
நம் வேலைகளையெல்லாம் முடித்து வரும்போது 
மாலையில் வாடியிருப்பது  
எத்தனை சௌகரியமாக இருக்கிறது..
எப்பேர்பட்டது இயற்கையின் கருணை..