கற்கையர்கள்

தண்ணீரில் விளையாட போன குழந்தையை
அடிக்க தூக்கிய அப்பாவின்  கை
கல்லாக மாறியது
ஆசிரியரின் கை கல்லாக மாறியது
தெருவில் சண்டையிட்டவர்களின் கை
கல்லாக மாறியது
ரௌடிகளெல்லாம் வேலையற்று போனார்கள்
திரைப்படங்களில்  சண்டைகாட்சிகள் இல்லாமல் போயின
போலீஸ்காரர்கள் முடங்கி போனார்கள்
சர்வாதிகார அரசுகள் கவிழ்ந்தன

பலர்  கல்லாக மாறிய கைகளுடன்
வெளியே வருவதில் அவமானபட்டனர்
வன்முறையாளர்களை மக்கள் ஒதுக்கினார்கள்
மனிதர்கள் இரண்டு வகையாக பிறந்தனர்
மனித கையர்க்கள் இன்னும் சந்தோஷமாக இருந்தனர்
கற்கையர்கள் இன்னும் கோபமேரி கல்லாகவே மாறினார்
சிலர் கொஞ்சமாக திருந்தி தங்கள் மனித கைகளை
திரும்ப பெற்றனர்

அப்பா குழந்தையிடம் கேட்டார்
"நீ வெளில போய்  தண்ணில விளையாடுறயா?"
குழந்தை யோசித்தது
"இங்க தண்ணி சிந்தினா அப்பா எல்லாத்தையும் தொடைக்கணும்"
குழந்தை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டது.

இந்த சமூகம் கேட்பதற்கு தயாரானது.