பெண் குரல்

நீ கொடுக்கும் உரிமையும் வேண்டாம்
நீ பிடுங்கிடும் உரிமையும் வேண்டாம்
சம பங்கென நாடகம் வேண்டாம்
போதும் போதுமுன் கரிசனம்

நானும் உன்னை  கடக்கிறேன்
என் கடைக்கண்ணால் உன்னை  அளக்கிறேன்
உன் சிருஷ்டி நீளம் அரிந்ததுபோல்
ஏளனமாய் கொஞ்சம் சிரிக்கிறேன் - இது எப்படி?

எனக்காக உன் இருக்கையை விட்டு தராதே
என் அருகில் அமரவும் தயங்காதே
நாமிருவரும் ஒரு இருக்கையில் அமரலாம்
அவ்வளவு மட்டும் நடக்கட்டும்

Just leave me alone இல்லை
please let me live இல்லை
why do you care..tell me..
why do you care?




ஒரு மண் புழுவைப்போல் மிக மெதுவாக
காலம் என்னுள் குழைந்து குழைந்து
என்னை நகர்த்தி கொண்டிருக்கிறது

ஈரம்

சிறிய எறும்புக்குள்ளும் ஈரம்
நசுக்கும்போது பிசுபிசுக்கிறது.
எரிந்து முடிந்த குடிசையில் 
வேறொன்றும் இல்லை 
கரிய கூட்டில்  சாம்பல் மிச்சம்
புயலில்லை அடைமழையில்லை 
வாசல் வேம்பு சலசலக்கும் தென்றலுக்கே 
உதிர்ந்துவிட்டது எல்லாம்..
#1: செம mood ஆயிடுச்சு.. அவள இழுத்து ஒரு lip to lip அடிக்கனும்னு தோணிச்சு..
#2: அவளை ஸ்பரிசிக்க உள்ளம் துடித்தது.. அவசரமில்லாமல் அவளது கண்ணம் தடவி இதழ்கள் உரசி  ஒரு முத்தமாவது தந்தே ஆகவேண்டும்..


எனக்கு  பிடிக்கும் இசை ஏன் உங்களுக்கு பிடிப்பதில்லை?
உங்களின் வலியை நான் உணராமல் இருப்பதைப்போலதானோ
~~
எங்கள் கதைகள் உங்களுக்கு பிடிப்பதில்லை
நல்லது.. ஆனால் அவையும் சொல்லப்படவேண்டிய கதைகள்தாம்
நீங்கள் கதையாகவாவது கேளுங்கள்
எங்கள் வாழ்கையின் சில பக்கங்களை..
BTW
உங்கள் கதையில் என்ன நடந்துவிட்டதென்று
அப்படி அழுகிறீர்கள்?
என் ஜன்னலிலிருந்து குதிக்கும் புறா
பற்றிக்கொள்ள எதுவிமில்லாத
தாங்கிபிடிக்க தடமில்லாத
மேடு பள்ளமென்றில்லாத
காற்று வெளியில் 
அந்த பயணத்திற்க்கான வழியை
போக போக அமைத்து..
எனக்கு பொறாமைதான்..