நாள்

இந்த நாளில் எதுவும் நடக்கவில்லை
எப்படியாவது ஒரு நிகழ்வை நிகழ்த்திவிட
ஒரு துரும்பையேனும் நகர்த்தி விட
முயன்று வெறுத்து வெட்க்கி இருக்கும் என் முன்
அது சலனமில்லாமல் கடந்து சென்று விட்டது

நாள் என்பதுதான் என்ன..
ஒன்றுமே நிகழாத
என் இருப்பை சற்றும் சட்டை செய்யாத
ஒரு நாளினை வைத்து
நான் என்ன செய்யப்போகிறேன்

எதற்காக இப்படி ஒரு நாள் என்னை கடக்கிறது ?