சிந்தனையற்ற கருமை

விளக்கில்லாத அமானுஷ்ய வெளியில் நின்று
இரவை வெறிக்கிறேன்
எங்கிலும் சிந்தனையற்ற கருமை 
கருந்துணியில் கண்கட்டியதுபோல் இருந்தது.
சிந்தனையற்ற கருமயில்  ஒரு பொட்டு
பொட்டு பொட்டாய் ஒளியின் அடையாளங்கள்..
காத்திருக்க காத்திருக்க
அதிகரிக்கின்றன நட்சத்திரங்கள்..
மின்னிக்கொண்டு சென்ற விமானம்
கலைத்தது இக்கவிதையை..