கனவென்பது ஒரு கலைப்படம் ..
புரிந்து புரியாமலும் 
பல கேள்விகளை எழுப்பி 
இன்னதென சொல்லமுடியாத சங்கடங்களை 
தாந்தோனியாக விதைத்து மறைகிறது.

எந்த ஒரு கனவும் முழுவதுமாக முடிவதில்லை..
பரணில் கிடைத்த புத்தகத்தை போல் 
கனவின் கடைசி பக்கங்கள் கிடைப்பதே இல்லை..