வெறுமையின் நிறைவு..

அலுவலுக்கு இடையே
ஒற்றை சிறகு
மெல்ல மெல்ல மிதந்தும்
காற்றில் முழுகியும்
இறங்கிக் கொண்டிருக்கிறது..
என்னருகே இருப்பவர்
என் பதிலுக்காக காத்திருக்கையில்,
என் தேநீர்
கோப்பையில் ஆவியாக ஆருகையால்,
என் சாய்வு நாற்காலி
கொஞ்சமாய் சாய்ந்து சின்னதாக கிரீச்சிடுகையில்,
நான் இன்னும் அந்த சிறகினுயூடே
லயித்திருக்கிறேன்..
அந்த கணத்தின் மௌனம்..
அந்த காலியான மௌனம்..
அத்தனை அழகான நிறைவு..
அத்தனை அழகான வெறுமை..
அந்த வெறுமை தந்துவிட்டு  போன அளவில்லா  நிறைவு..
ஒன்றுமில்லாத விஷயங்களில்தான்
எத்தனை இருக்கின்றன..

புயல்

புயலின்போது
கிளைகளை உதிர்த்த மரங்கள்
வேரூன்றி நின்றன..
கிளைகளை விடாத மரங்கள்
வேரோடு சாய்ந்தன..
மனிதா உனக்கு 
எது புயல் ?
எது வேர் ?
எது கிளை?

I wrote a poem


I wrote a poem
About a crying child
No one cared to read.
Then again..
I wrote a poem
on what made the child to cry
No one cared to read.
Then again..
I wrote a poem
on how I cried watching a crying child
No one cared to read.
Then again..
I wrote a poem
on the tornado I felt watching a crying child
No one cared to read.
Then again..
I wrote a poem.
அவர்களின் கைகள் நீட்டியபடி  விரிந்திருக்கின்றன..
அவை குளிரில் உறைந்திருக்கின்றன
அவை  உங்கள்  அணைப்புக்காக காத்திருக்கிறேன்
வெப்பத்துக்கான உங்கள் தேவையையெல்லாம் முடித்து
மிச்சமிருப்பதை கொஞ்சமாய் அவர்களுக்கும்  கொடுங்கள்
உங்களுக்கான நேரத்தையெல்லாம் நீங்களே வைத்துக்கொண்டு
ஒருமுறை மூச்சுவிடும் வினாடி மட்டும் அவர்களை  அனைத்துக்கொள்ளுங்கள்
அவர்களின் கைகள்  குளிரில் உறைந்திருக்கின்றன
அன்பை பிச்சையிடுங்கள் 


சகா

திடீரென உங்கள் முன்
உடைந்து அழும் ரோஜாவை
என்ன செய்ய போகிறீர்கள்?
"ஏன் அழுகிறாய்?" என்று கேட்டு என்ன  ஆகப்போகிறது?
"நான் அப்பவே சொன்னேன்" என்று உங்கள்
துடிப்பற்ற மார்பை தட்டி என்ன ஆகப்போகிறது?
இப்படி செஞ்சு அப்படி சொல்லி என்று
ரோஜாவுக்கு யோசனை சொல்லித்தான் என்ன?
கொஞ்சமாய் குளிர்ந்த  நீர் தெளித்து
இதழ்கள் தடவி
"ம்ம்.." கொட்டியபடி அவள் சொல்வதை கேளுங்கள்..
பல நேரங்களில் ரோஜாக்கள் தேடுவது
ஒரு சகாவைத்தான்..
குத்தி கிழிக்கும் முட்களுடைய ரோஜாக்கள்
எப்படியும் எல்லாவற்றையும் கடந்துவிடும்..

உனக்கான அலை

கடற்கரையில் நின்று அலையை எதிர்பார்கிறாய்
அதுவே வந்து கால்களை நினைக்க எதிர்பார்கிறாய்
அது ஜில்லென்று உஷ்ணம் தணிக்க எதிர்பார்கிறாய்
இதோ.. ஒரு அலை கொஞ்சம் மேலெழுந்தபடி வருகிறது..
நுரை புரள புரள வருகிறது..
கால்களை நினைக்கிறது
அது ஜில்லென்று இருக்கிறது..
அதற்காக கொஞ்சம் சிரிக்கிறாய்
கடல் உனக்கு பிடித்து விடுகிறது..

கடலிடம் நீ காதலை எதிர்பார்ப்பதில்லை
கால் நனைத்த கடலை வீட்டிற்கு அழைப்பதில்லை
இன்னொருவர் கால் நினைக்காதபடி தடுப்பதில்லை
கடலை அடைய முற்படுவதில்லை

கடலை சுடிதார் போட வற்புறுத்துவதில்லை
புர்க்கா அணிய வற்புறுத்துவதில்லை
வேசியென்று ஏசுவதில்லை

நீ அங்கு இல்லாதபோதும்
கடல் அதன் அலைகளை வீசிக்கொண்டுதான் இருக்கிறது.
உனக்கான அலை என்று எதுவுமில்லை..
உங்கள் கட்டாயங்களின், எதிர்பார்ப்புகளின்
பிடுங்கல்களையெல்லாம் தாண்டி
எனக்குள்ளே ஒருவன் சிரித்துக்கொண்டிருக்கிறான்..

உனக்கு முத்தம் கொடுக்க தெரியாது

உனக்கு முத்தம் கொடுக்க தெரியாது
இதை நான் உன்னிடம் சொன்னதுமில்லை..
உன்னுடனான முத்தங்கள் இதழ்களினூடே முடிவதில்லை
முழு மூச்சையும் உள்ளிழுத்துகொள்கின்றன..

உனக்கு முன்புவரை,  கிடைத்த முத்தங்களைவிட
நான் கொடுத்த முத்தங்கள் அதிகம்..
உன்னுடனான முத்தங்கள்
நான் கொடுத்ததா? எனக்கு கிடைத்ததா?
எனக்கு தெரியவில்லை..
மென்மேகங்கள் உரசிக்கொள்வதைப்போல்
மிக இயல்பாக அது நடந்துவிடுகிறது

உனக்கு முன்புவரையிலான முத்தங்கள்
எனக்கு நியாபகமில்லை
உன்னுடைய ஒவ்வொரு முத்தமும் கூட 
அப்படித்தான் - எனக்கு நியாபகமில்லை
ஆனால் அதற்காக வருந்துகிறேன்

நீ மற்றவர் போல இல்லை
ஆனால் நான் அதை உன்னிடம் சொல்ல போவதுமில்லை
முத்தத்தில் நீ ஒரு வகை
அதில் தோய்ந்து துவண்டு புன்னகைக்கும்
நான் ஒரு வகை..





கனவென்பது ஒரு கலைப்படம் ..
புரிந்து புரியாமலும் 
பல கேள்விகளை எழுப்பி 
இன்னதென சொல்லமுடியாத சங்கடங்களை 
தாந்தோனியாக விதைத்து மறைகிறது.

எந்த ஒரு கனவும் முழுவதுமாக முடிவதில்லை..
பரணில் கிடைத்த புத்தகத்தை போல் 
கனவின் கடைசி பக்கங்கள் கிடைப்பதே இல்லை..



முதலில் ஆடை அவிழ்க்க  வேண்டும்
பின் வெட்கம் அவிழ்க்க வேண்டும்
பின் காமம் அவிழ்க்க வேண்டும்
பின் உண்மை பேச வேண்டும்
பின் மீண்டும் ஆடை அணியலாம்