கழிப்பறையில் புகுந்த பூரான்

வாழ்க்கை முழுதும் திரும்ப திரும்ப போனாலும்
சலிக்காத ஒரு இடம்
எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாத ஒரு இடம்
என் மீது மதிப்பீடுகள் இல்லாத ஒரு இடம்
யாரும் பார்ப்பதில்லை என்று தெரிந்தும்
தவறுகள் எதுவும் நடக்காத இடம்
இந்த ஈன உடலின் உண்மையை
நாம் பொறுத்துக்கொள்ளும் இடம்

எதையுமே சிந்திக்காத சில நிமிடங்கள்
சிந்தனையில்  நீயில்லை, அவரில்லை, நாடில்லை 
அட நானும் கூட இல்லை..
மெய்யான ஒரு இல்லாமையை வெறிக்கும் ஒரு இல்லாமை 
அப்போது காலருகில் நெளியும்  ஒரு பூரானை 
என்ன செய்ய?
காலியான சிந்தனையில் இப்போது கோபம் மட்டும் 
அத்தனை ஆத்திரம்..
அது பயமில்லை.. கண்டிப்பாக பயமில்லை..
எத்தனை பெரிய விஷ பாம்பாக இருந்தாலும் 
கழிவறையில் புகுந்தால் கோரமாகத்தான் சாகிறது..

ஏன் கழிப்பறை இத்தனை உன்னதமான இடமாக இருக்கிறது?
அல்லது 
இத்தனை உன்னதங்களெல்லாம் கழிப்பறையாக இருக்குமோ?