I would disappear


Like the hunger artist
i disappear in hay
for all my dreams
i spent everyday
its true that i smiled
its true that i cried
its true that  i loved
and that i was loved
but still its true
Like the hunger artist
i would disappear one day

கடவுள்

தாசியின் யோனியினுள்
கிழியும் ஆணுறை
"விடுய்யா.. ஒன்னுமாகாது" என்றாள்..
"ஹ்ம்ம்..நம்ம யாருக்கு கெடுதல் செஞ்சோம்" என்றான்..
நேசமாய் சிரித்துகொண்டனர்


விளம்பரப்பக்கத்தைபோல்
சிதறியிருந்தன எண்ணங்கள்
நடு நெஞ்சில் ஒரு கருங்கல் பாரம்
அவர் எண்ணை அருகில் அழைத்தார்
மூச்சுவிடும் நேரத்தில்
ஒரு இறகு தரைதொடும் நேரத்தில்
ஒரு குழந்தை சிரித்துவிடும் நேரத்தில்
ஒரு டால்பின் எழும்பி குதிக்கும் நேரத்தில்
அவர் ஒரு வார்த்தை மட்டும் சொன்னார்
'சரி' என்று..
காலம் காலமாக வருத்தும் நோயை
நொடிகளில் விரட்டும் வார்த்தைகள்.
எதற்காக அவர் அப்படி  சொல்ல வேண்டும்?
தெரியவில்லை..
எல்லோரிடமும் அவை இருப்பதும் இல்லை..



i cant complain.
this is the best anyone can get..
i respect that freedom..
OMG.. am the special one..
but not yet.. not yet..
freedom just gave me wings..
am trying to fly...
i have to know how to make it a majestic flight
I have to create my path..
OMG.. am the special one.

புற்றுனோய் மனிதன்

என் நம்பிக்கைகள் எல்லாம் பொய்த்துவிட்டன
எல்லாம் மிதப்பதுபோல்தான் இருக்கிறது
எதுவும் பெரிய விஷயமில்லை

நான் சொல்வதில் உங்களுக்கு விருப்பமில்லை
ஒரு ஊருக்கு முன்னால் என் தனிக்குரல்
நான் அமைதியானதுகூட உங்களுக்கு தெரியவில்லை

இப்படித்தான் உருவாகுமோ
கோடிசெல்களில் திடீரென
புற்றுனோய் மனிதன்

நாள்

இந்த நாளில் எதுவும் நடக்கவில்லை
எப்படியாவது ஒரு நிகழ்வை நிகழ்த்திவிட
ஒரு துரும்பையேனும் நகர்த்தி விட
முயன்று வெறுத்து வெட்க்கி இருக்கும் என் முன்
அது சலனமில்லாமல் கடந்து சென்று விட்டது

நாள் என்பதுதான் என்ன..
ஒன்றுமே நிகழாத
என் இருப்பை சற்றும் சட்டை செய்யாத
ஒரு நாளினை வைத்து
நான் என்ன செய்யப்போகிறேன்

எதற்காக இப்படி ஒரு நாள் என்னை கடக்கிறது ?