மரணத்தை எதிர்னோக்கி வாழ்பவனுக்கு
மரணித்துக்கொண்டே இருக்கிறது
வாழ்க்கை...

நான்..

உங்களனைவரிடமும் ஒட்டியிருந்த சிறுசிறு என்னை பிய்த்தெடுத்துக்கொண்டேன்..
என்னிடமிருந்த சிறிய உங்களை  வெளியே எறிந்துவிட்டேன்..
நான் என்னால் மட்டுமே ஆனவன்..
பின் தெரிந்தது..
யாருமில்லாத நான் நானில்லை..
என்னிலிருக்கும் நான் மட்டுமே நானுமில்லை..

ஒன்றானவன்..

முட்டிக்கொண்ட மேகங்கள் இல்லாமல் போயின..
மின்னல்களால் வெட்டப்பட்டாலும் -
அப்படியே இருக்கிறது வானம்..
மழை கவிதைகள் ரசிக்க மட்டுமன்று..
சற்று நனையவும் தான்; அதுபோலவே
குழந்தை கவிதைகளும், கடவுள் கவிதைகளும்..