வெறுமையின் நிறைவு..

அலுவலுக்கு இடையே
ஒற்றை சிறகு
மெல்ல மெல்ல மிதந்தும்
காற்றில் முழுகியும்
இறங்கிக் கொண்டிருக்கிறது..
என்னருகே இருப்பவர்
என் பதிலுக்காக காத்திருக்கையில்,
என் தேநீர்
கோப்பையில் ஆவியாக ஆருகையால்,
என் சாய்வு நாற்காலி
கொஞ்சமாய் சாய்ந்து சின்னதாக கிரீச்சிடுகையில்,
நான் இன்னும் அந்த சிறகினுயூடே
லயித்திருக்கிறேன்..
அந்த கணத்தின் மௌனம்..
அந்த காலியான மௌனம்..
அத்தனை அழகான நிறைவு..
அத்தனை அழகான வெறுமை..
அந்த வெறுமை தந்துவிட்டு  போன அளவில்லா  நிறைவு..
ஒன்றுமில்லாத விஷயங்களில்தான்
எத்தனை இருக்கின்றன..

புயல்

புயலின்போது
கிளைகளை உதிர்த்த மரங்கள்
வேரூன்றி நின்றன..
கிளைகளை விடாத மரங்கள்
வேரோடு சாய்ந்தன..
மனிதா உனக்கு 
எது புயல் ?
எது வேர் ?
எது கிளை?

I wrote a poem


I wrote a poem
About a crying child
No one cared to read.
Then again..
I wrote a poem
on what made the child to cry
No one cared to read.
Then again..
I wrote a poem
on how I cried watching a crying child
No one cared to read.
Then again..
I wrote a poem
on the tornado I felt watching a crying child
No one cared to read.
Then again..
I wrote a poem.