ஏரியின் கரையில் எதோ ஒரு  ஓடையின் நீர்
அதில் மிதப்பது எதோ ஒரு  மரத்தின் இலை
காற்றில் மிதந்து இலையில் அமர்வது எதோ பறவையின் இறகு
இதில் யாருக்கு சொந்தம் எனதிந்த மென் புன்னகை..
மூடிய விழிகளுடன் அவன் மரணித்த பின்
விழியோரத் துளியாய் வழிகிறது
மிச்சமிருந்த வாழ்க்கை..
என் கொடூர கனவொன்றை 
நீ பார்த்துக்கொண்டிருப்பதாய் உணர்ந்தேன்..
ரத்தம் சிந்தி நான் இறக்கும் தருணத்தில்
திடுக்கிட்டு எழுந்தேன்..
கண்களில் நீர் வடிய, என்னை எழுப்பாமல்
அழுகவும் அணைக்கவும் முற்பட்டுக்கொண்டிருந்தாய்..
என் வியர்வையை துடைத்த உன் கைகளின் நடுக்கதிதில்
ஞாபகம் வந்தது மிச்சமிருந்த கனவு..