யாருமில்ல்லாத அந்த ரயில் நடைமேடையின் 
கடைசி பெஞ்சின் மங்கிய வெளிச்சத்தில்  
ஒரு ஆணும் பெண்ணும்
கொஞ்சமாய் சிரித்தபடி அமர்ந்திருந்தனர்.
அவர்களின் பேரொளியை  
வேகமாய் கடந்த ரயிலில் இருந்த 
தரித்திரத்தை வெறித்திருந்தவன் 
தரிசித்து தூங்கச்சென்றான்.
என் விஸ்கிக்கான 
மீன் துண்டுகளில் 
முள்ளில்லாத பாகங்களை 
யார் எடுத்து வைப்பது 
நீ இல்லாமல் 
ஜன்னலோர ரயில் பயனத்தில்
தூரத்தில் வலையும் பாதை.  
வேறு ஒரு ரயிலை பார்பதுபோல் 
என் ரயிலயே நான் பார்க்கிறேன்
அடர் இருள்
மரங்களின் ஊடாக  தெரியும் நிலவு
நிழல் விழாத வெளிச்சம்
குளிர் நடுங்கம் அதிகலையில் நாய்கள் குறைத்து துரத்த
வேறு இடம் நகரும் பைத்தியக்காரன் 
தன் கம்பலியை அகல விரிது 
இன்னும்  இருக்கமாக சுத்திக்கொண்டு 
இதம் அடைந்தான்
இழவுக்கு போகிர விழியில்தான்
தோகை விரித்தாடுகிறது 
மனம்
கவிதை கொஞ்சும் வாழ்கையில் 
சிலநொடிகளே வரும் தரித்திரத்தின் பய்ச்சல்
 நல்லதொரு கவனசிதரல்
உறை போட இரவல் வாங்கிய 
கெட்டித்தயிர் 
எங்கள் வீட்டின்  நீர்த்த பாலுடன் 
கூட மறுக்கிறது.
 அதி வேகமாக சென்றுகொண்டிருந்தேன்  
நாயொன்று சாலையில் நடுவே  வந்துவிட்டது 
நான் திடுக்கிட்டு தடத்தை மாற்ற முற்பட்டேன் 
அந்த நாயும் பதறி திணறியது 
எங்களின்  பயந்த கண்கள் சந்தித்து கொண்டன 
அது மிகுந்த நம்பகத்துடன் நகராமல் நின்றது 
 

 ஒரு கோடைகால பூவை 

யாரும் பார்க்காமல்தான் கிடக்கிறார்கள்.

ஒரு நாய் அதனை முகர்ந்து  

அடுத்து இருக்கும் மரத்தில் 

தன்  வேலையை முடிக்கிறது.