தன்னை விளக்க
வார்த்தைகள் தேவைப்படும்போது 
வெட்கப்படுகிறது அன்பு ..
 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

என் பேரன்பை சொல்லிவிட எத்தனித்து
நித்தம் எழுதும் கவிதைகள் பத்தவில்லை..
முழு அன்பை நீ உணரும் நாளில்
நம்மிடையே மொழி அழியலாம்..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தற்கொலையிலிருந்து பின்வாங்கியவன்

இதயத்தின் கடைசி எண்ணங்களை
கவிதையாக்கி பார்த்தவனுக்கு
வாழ்க்கை பிடித்துவிட்டது..
வார்த்தைகளால் கட்டிக்கொள்ளலாம்..
விடுவிப்பது எப்படி..
கனவுகளை அரங்கேற்றலாம்
நினைவுகளை எப்படி..
மனிதனை சிறைவைக்கலாம்
மனதை எப்படி..
உண்மையென நம்பவைக்கலாம்
உண்மையாய் எப்படி...