அன்புத்தோட்டா

அன்பை ஒரு தோட்டாவில் அடைத்து சுடுகிறேன்
"உங்கள் பாவங்களையெல்லாம் ரத்தமாய்
உங்கள் உடலே வெளியேற்றும் " என்கிறேன்..
"அப்படியானால் நாங்கள் இனி
நல்லவர்களாக  இருப்போமா?" என்று கேட்கிறீர்கள்.
நான் அவசரமாய் சொல்கிறேன்
"அப்படியில்லை..
இதுவரையிலான உங்களின் பாவக்கணக்கு
நேர் செய்யப்பட்டுள்ளது..
இதன் பிறகு  நீங்கள்தான் மீண்டும் அது
தொடங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்"

உங்கள் முகத்தில்தான் எத்தனை ஏமாற்றம்

புத்தனுக்கும் உங்களுக்கும் எட்டாதூரம்

பூனைக்குட்டியை  ஏன் நசுக்கி கொண்றீர்கள்?
நான்தான் அதற்காக அழுதுவிட்டேனே

மாட்டிறைச்சி சாப்பிடுபவனை ஏன் கொண்றீர்கள்?
நான்தான் அதற்க்கு வருத்தம் தெரிவித்து விட்டேனே

அரிசி திருடியவனை எதற்க்காக கட்டிவைத்து அடித்து கொண்றீர்கள்?
நாங்கள்தான் அதற்க்காக சிறை தண்டனை பெற்றுவிடடோமே

அது சரி.. நீயேன் இத்தனை விசனப்படுகிறாய்
ஏனென்றால் ஒரு உயிரை வாழவைக்கும்
அடிப்படை  அன்புகூட உங்களிடத்தில் இல்லையே ..
உங்களிடத்தில் எப்படி புத்தனை பற்றி பேசுவது?