கடவுளின் பின்குறிப்பு..

நாமிருவரும் பகை கொண்டோம்..
உன்னை அழிக்க என் கடவுளிடம் வேண்டினேன்..
என்னை அழிக்க நீ உன் கடவுளிடம்..
எதுவும் நடக்கவில்லை...
நம்மிடமிருந்து விலகினர் கடவுள்கள்..
தனிமையாலும் காலத்தின் பேயறைகளாலும்
ஒன்று சேர்ந்தோம்..
திரும்பி வந்தனர் கடவுள்கள்..
மீண்டும் பகை கொண்டு வேண்டினோம்..
மீண்டும் விலகினர் கடுவுள்கள் - சிறிய பின்குருப்புடன்..
"எங்களை புரிந்துகொண்டால் நாங்கள் உங்களுக்கு தேவையில்லை"