முத்தம்

மோகம் தலைக்கேறி முட்டித்தள்ளும்..
அடுத்தநொடி அவள் முலையில் பற்கள் பாயும்
கிழிந்த ஆடைக்கு கோபம் உதித்து
என் உஷ்ண பூச்சில் மோகமாய் மாறும்
விடைத்த விரல்கள் தளர்ந்து நடுங்கும்
தாமே வந்து என் தலையை கோதும்
பேரின்பமெல்லாம் பெருமூச்சாய் இழுத்து
அவள் உடல்முழுதும் படர்ந்தெழும்பும்
சிலநொடி சூன்யமாகும் எல்லாம்
மூடிய விழியில் அசையாது நிற்கும்
நேற்றைய உச்சத்தில் கூடுபிரிந்த காமஉயிர்
அத்தருணம் உட்புகும்
கோதும் கைகள் கற்றை முடிபிடித்து
விரட்டென எனை இழுத்து
விழி வழி ஆழத்தில் ஓர் வெறி பரப்பும்
இரு உடல்களும் இதழ்வழியே விழுங்க பாய்ந்து
ஒரு இடிமுத்தம் அரங்கேறும்...

பரணில் கிடந்த வெள்ளை காகிதம்
பிரித்துப்பார்த்தேன்
பழைய வெள்ளை
துளிர்த்து வளர்ந்து பழுத்து
உதிர்ந்து உருமாறி சருகாகி
பொடித்து மண்ணாகும்
எது?
 எல்லாம்.
வெளிச்சத்தை கடக்கும் புகை
தன்னிருப்பை தெரிவித்து சுழன்றது
யாரும் சீண்டாத அந்த பாதையை அறிவித்ததற்கு
கொஞ்சமாய் மின்னியது விளக்கு..

மூன்று வரிக்கவிதை
முடிவில்லா ஆகாயம்
ஹைக்கூ

சிந்தனையற்ற கருமை

விளக்கில்லாத அமானுஷ்ய வெளியில் நின்று
இரவை வெறிக்கிறேன்
எங்கிலும் சிந்தனையற்ற கருமை 
கருந்துணியில் கண்கட்டியதுபோல் இருந்தது.
சிந்தனையற்ற கருமயில்  ஒரு பொட்டு
பொட்டு பொட்டாய் ஒளியின் அடையாளங்கள்..
காத்திருக்க காத்திருக்க
அதிகரிக்கின்றன நட்சத்திரங்கள்..
மின்னிக்கொண்டு சென்ற விமானம்
கலைத்தது இக்கவிதையை.. 

களிமண்

என்னை களிமண் என்று நீங்கள் சொல்வதை
நான் ஒத்துக்கொள்கிறேன்...
நீங்களாகவே முடிவெடுத்து  என்னை ஒரு பொம்மையாக்குகிறீர்கள்..
ஒரு  முக்கிய புள்ளியின் கொலுவில் 200ல் ஒன்றாக நான்..
எனக்கிது  வேண்டாம்..
நான் பானையாகிறேன்..
ஆயிரம் பிறை கண்ட அந்த ஏழை கிழவியின்
குடிலில் தண்ணீர் சுமப்பேன்..
பல கதைகள் கிடைக்கும்.. தாகம் தீர்ப்பேன்..
வாரம்  ஒருமுறை வரும்  அவள் பேத்தியின்
இடுப்பில்அமர்ந்து வளையோசை கேட்பேன்..
அண்டை  வீட்டாரின் கைப்பிள்ளையாவேன்..
அவளின் இறுதி ஊர்வலத்தில் வெட்டுண்டு உடைந்தாலும்
ஒரு வாழ்வு இருக்கும் எனக்கு..
கரப்பான்கள் ஊரும் பரண்பெட்டியில்
வருடமெல்லாம் மூச்சடைத்து
ஒன்பது  நாளைக்கு மட்டும்
ஆண்டவனாக மாற
நான்  ஆளில்லை..
விட்டுவிடுங்கள்..
முதல் வரியை தருவதுபோல் தந்துவிட்டு
முழு கவிதையையும் உள்ளிழுத்துக்கொல்கிறது
கடல்..
எத்தனை வரிகள் தந்தாலும்
முடியாது நம் பக்கம்..
அத்தனையும் சிதறி சிதைந்தாலும்
தொலையாது நம் சொர்க்கம்..
துருவம்  சென்று மறைந்தாலும்
மறக்காது முதல் முத்தம் ..
அரவம் அற்று  கிடந்தாலும்
உயிர்நாதம் உன் பெயராகும்..
பிறவற்று போகவிடு  - இறைவனே
இது போதும்..

பிரபஞ்சத்திலிருந்து ஒரு குழல் வழியே
எனக்குள் வரும் வரிகள்...
எனக்குள் எல்லாம்
என்னிலிருந்து எல்லாம்..