உனக்கான என் காதலை நான் எழுதியதும் இல்லை...
எழுதப்போவதுமில்லை...
என் கிழவனும் கிழவியும் பரிமாறாமல் வைத்து
வாழ்ந்து முடித்த காதல் போல்..
என் மூச்சுக்காற்றின் வழியே
காற்றில்  கசிந்துகொண்டிருக்கிறது காதல்..
ஒரு நாள் அதுவும் நின்று போகும்..
என் கல்லறையின் மீது பூக்கும் பூவை சுவைக்கும்
தேனிக்கு தெரியும்
உன்சுவை..