பூனை குட்டியின் நெடுஞ்சாலை நிமிடம்

ஒரு பூனைக்குட்டி நெடுஞ்சாலையை கடக்க பார்க்கிறது
இத்தனை வாகனங்கள் கடப்பதை
கொஞ்சமும் சட்டை செய்யாமல் அது இருக்கிறது..
அதன் தவறாகவே இருக்கலாம்..
இருக்கட்டுமே..
உங்களுக்கென்ன அவ்வளவு அழுத்தம்?
நீங்கள் போட்ட சாலைதான்..
நீங்கள் வடிவமைத்த நகரம்தான்..
நீங்கள் வரைந்த சடடம்தான்...
நீங்கள் நம்பும் சாதிதான், மதம்தான்..
உங்கள் மனிதருக்கான உலகம்தான்..
அதில் ஏன் ஒரு பூனைக்குட்டி பலியாக வேண்டும்?

கருத்துகள் இல்லை: