நல்ல வேளை!!

நல்ல வேளை!
நாம்  பார்த்துக்கொண்டு இருக்கும்போதே
 பூக்கள் வாடி வதங்கி கருகி விடுவதில்லை
காலையில்  மலர்ந்திருக்கும் ரோஜா 
நம் வேலைகளையெல்லாம் முடித்து வரும்போது 
மாலையில் வாடியிருப்பது  
எத்தனை சௌகரியமாக இருக்கிறது..
எப்பேர்பட்டது இயற்கையின் கருணை..

கருத்துகள் இல்லை: