அன்புத்தோட்டா

அன்பை ஒரு தோட்டாவில் அடைத்து சுடுகிறேன்
"உங்கள் பாவங்களையெல்லாம் ரத்தமாய்
உங்கள் உடலே வெளியேற்றும் " என்கிறேன்..
"அப்படியானால் நாங்கள் இனி
நல்லவர்களாக  இருப்போமா?" என்று கேட்கிறீர்கள்.
நான் அவசரமாய் சொல்கிறேன்
"அப்படியில்லை..
இதுவரையிலான உங்களின் பாவக்கணக்கு
நேர் செய்யப்பட்டுள்ளது..
இதன் பிறகு  நீங்கள்தான் மீண்டும் அது
தொடங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்"

உங்கள் முகத்தில்தான் எத்தனை ஏமாற்றம்

கருத்துகள் இல்லை: