கலையை ரசிக்கும் மனம்

கதைகளின் காட்டுத்தீயில்
கருகும் மனம்
கவிதைகளின் பேரலைகளில்
தத்தளிக்கும் மனம்
பேரானந்தத்தில் திளைத்து
மென்மையாய் சிரிக்கும் மனம்
இவைதானே கலையை ரசிக்கும்
சிறு பொழுதின் மனம்?
எத்தனை பொய்களை கடக்க வேண்டும்
சிறு உண்மைகளை தரிசிக்க..

கருத்துகள் இல்லை: