அகராதி

அழுக்கு என்றால் துடைக்க தயார் 
எச்சில்  என்றால் கொஞ்சம் தயக்கம்.
தொடுதல், ஸ்பரிசம் என்பதிலிருக்கும் நேசத்தை 
தீட்டு என்று ஒதுக்கி வைப்பர் 
ஊர் என்று இருந்த மக்களை 
சேரி என்று தள்ளி வைத்தர் 
இறைச்சி என்று சுவைத்து வந்ததை 
கவுச்சி என்று கூறி முகம் சுளித்தர் 
படையலாய் அளித்து வந்ததை 
பிரசாதம் என்று சொல்லி தனியாய் வைத்தான் 


பிரிவினையின் நஞ்சை  அச்சில் வார்த்து 
மொழியின்  அகராதியில் ஏற்றி  
அங்கீகரிக்கும் மூடர்கள்..
 
 

கருத்துகள் இல்லை: