முரண்

இத்தனை அன்பை நான்   அடைய 
இத்தனை பெரிய நோயை தாங்க வேண்டுமா?

இத்தனை கருணையை நான்  பெற  
இத்தனை தனிமையாய் இருக்க வேண்டுமா?

இத்தனை பின்னல்கள் என தெரிய 
கூட்டை கலைத்துதான் பார்க்க வேண்டுமா ?

உறவின் சாரம் அறிந்து கொள்ள 
அதை முறித்துதான் பார்க்க வேண்டுமா?

இன்னும் வலுவடைய 
இப்படி உடைத்துதான் கட்ட முடியுமா?

எல்லைகளை நான் அறிய 
இத்தனை தூரம்  கடந்து திணற வேண்டுமா?


கருத்துகள் இல்லை: