வெறுமையின் நிறைவு..

அலுவலுக்கு இடையே
ஒற்றை சிறகு
மெல்ல மெல்ல மிதந்தும்
காற்றில் முழுகியும்
இறங்கிக் கொண்டிருக்கிறது..
என்னருகே இருப்பவர்
என் பதிலுக்காக காத்திருக்கையில்,
என் தேநீர்
கோப்பையில் ஆவியாக ஆருகையால்,
என் சாய்வு நாற்காலி
கொஞ்சமாய் சாய்ந்து சின்னதாக கிரீச்சிடுகையில்,
நான் இன்னும் அந்த சிறகினுயூடே
லயித்திருக்கிறேன்..
அந்த கணத்தின் மௌனம்..
அந்த காலியான மௌனம்..
அத்தனை அழகான நிறைவு..
அத்தனை அழகான வெறுமை..
அந்த வெறுமை தந்துவிட்டு  போன அளவில்லா  நிறைவு..
ஒன்றுமில்லாத விஷயங்களில்தான்
எத்தனை இருக்கின்றன..

கருத்துகள் இல்லை: